23 ஜூன் 2017

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்



படம் இணையத்திலிருந்து  
  1. அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம்
  2. அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி
  3. அழகான சின்னத்தேவதை
  4. ஆனந்தக்குயிலின் பாட்டு
  5. இந்த மன்றத்தில் ஓடி வரும் 
  6. இரத்தத்தின் இரத்தமே
  7. எல்லாமே என் தங்கச்சி- என் தங்கை கல்யாணி
  8. எதையும் தாங்குவேன் அன்புக்காக 
  9. எந்தன் பொன் வண்ணமே
  10. என்ன தவம் செய்து விட்டோம் 
  11. என் தங்கை ஆயிரத்தில் ஒருவள் என்று பூக்களும் நட்சத்திரங்களும் சொல்லும், 
  12. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு
  13. ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன் 
  14. ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய்க்கரைய
  15. கண்ணனின் சன்னிதியில் 
  16. கல்யாணச்சாப்பாடு போடவா
  17. காத்தாழம் காட்டு வழி
  18. கொடியில் இரண்டு மலர் உண்டு.- உயிரா மானமா?
  19.  சாமந்திப்பூப்போல சாய்ந்தாடம்மா 
  20. சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம்
  21. பூப்பூவாய் புன்னகைக்கும் இவள்
  22. பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  23. பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்லை
  24. மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
  25. மலர்ந்தும் மலராத 
  26. மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்
  27. மானூத்தி மந்தையிலே மாங்குட்டி பெத்த பயிலே
  28. மண்ணைத்தொட்டு 
  29. முத்து நகையே
  30. முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை விரயம் செய்து ஏன் அழுகிறாய்
  31. தங்க நிலவே உன்னை உருக்கி
  32. தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி - ராஜ காளி அம்மன்
  33. தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்
  34. தண்ணீரிலே தாமரைப்பூ
  35. தாயின் முகமிங்கு நிழலாடுது
  36. திரு நிறைச்செல்வி  மங்கயர்க்கரசி
  37. தென்  பாண்டித்தமிழே
  38. தென்கிழக்குச்சீமையிலே செங்காத்து பூமியிலே
  39. தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு
  40. நண்டூருது நரியூறுது
  41. வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்... செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
                                          
Agneepath - Abhi Mujh Mein Kahin ஹிரிதிக் ரோசன் ,

எங்கள் பிளாக்கில்  வெள்ளிக்கிழமை பதிவாக வந்திருக்கும்    வெள்ளி வீடியோ. ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும். எனும் தலைப்பில்  அண்ணன் தங்கை பாடல் தொகுப்பை   கண்டதும் நான் சேனைத்தமிழ் உலா வில் ஒருவருடம் முன்பு  பகிர்ந்த பாடல் தொகுப்பு நினைவுக்கு வந்தது. எங்கள் பிளாக் பதிவுப்பாடல் தொகுப்பில் வந்த பாடல்களில்  13  பாடல்கள் என் தொகுப்பில்  இல்லை. அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள் இத்தனை உண்டென்பதே இப்பதிவுகள் பார்த்ததும் தான் அறிய முடிந்தது. 

ஒரு காலத்தில் இந்த அண்ணன் தங்கை பாடல்களை  இணையத்தில் தேடி இருக்கின்றேன். இணையத்திலும் இத்தனை பாடல்கள் அண்ணன் தங்கை பாசம் சொல்ல இருந்தாலும் அவை  ஒரே தொகுப்பாய் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதை ஒரு தொகுப்பாக்கினால் என்ன எனும் சிந்தனையில் தோன்றியதே இந்த  பதிவு. 

பாடல்களை ஒலி ஒளியாக வரிவரியாக பதிந்து முழுத்தொகுப்பாக்க நேரம் எடுக்கும் எனினும் இப்பதிவில் முதல் வரிகளை  மட்டும் நினைவு படுத்தும் படி மொத்தம் 39 பாடல்களை   தொகுத்திருக்கின்றேன். 

கீழே இருக்கும் இணைப்புக்களில்   இங்கே தொகுத்திருக்கும் பாடல்களுக்குரிய ஒலிஒளிக்காட்சிதொகுப்பும், வரிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த தொகுப்பில் இல்லாத வேறு பாடல்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நட்பூக்களே!

  நன்றி எங்கள் பிளாக்..

28 கருத்துகள்:

  1. அருமையான முயற்சி
    அற்புதமானப் பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி. எங்கள் பிளாக் பதிவைக் குறிப்பிட்டுள்ளமைக்கு. நான் சொன்ன ஹிந்திப் பாடல்களில் இரண்டு பாடல்கள் சொல்லியிருந்தேன். (இன்னும் கூட ஹிந்தியில் இருக்கிறது) அதில் ஒன்றை மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் வரும் சூப்பர் பாடலை விட்டு விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நான் நீங்கள் கொடுத்த இந்திப்பாடல்கள் இரண்டையும் இணைத்திருக்கின்றேனே.. நானும் ஒரு இந்திப்பாடல் அசைபடமாக இணைத்திருந்தேன். தேடினால் இன்னும் கிடைக்கும்.

      நீக்கு
  3. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நிறைய பாடல்களை நான் கேட்டதில்லை. பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து பாடல்களும் பிடிக்கும்... அருமையான தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  5. நல்ல தொகுப்பு. பாராட்டுகள். எனக்கு தெரிந்து அண்ணன் - தங்கை பாசக்கதை திரைப்படம் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (அண்ணனாகவும்) நடிகையர் திலகம் சாவித்திரி (தங்கையாகவும்) நடித்த ’பாசமலர்’ படம்தான். படத்தைப் பார்த்த பெண்கள் உருகோ உருகோ என்று உருகி, கண்களை கசக்க வைத்த படம். அப்போது நான் பள்ளி மாணவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்த்திடலுக்கும் உங்கள் நினைவு மீட்டலுக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  6. அருமையான பாடல்களின் தொகுப்பு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  7. தேடித்தந்தமைக்கு நன்றி
    த,ம,4

    பதிலளிநீக்கு
  8. அடேங்கப்பா ,இவ்வளவு பாடல்கள் இருக்கா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்னும் இருக்கும், தேட வேண்டும்,

      நீக்கு
  9. பாடாத தேனீக்கள் படத்துல வண்ண நிலவே.... வைகை நதியே.... சிவக்குமாரும், ராதிகாவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடலா ராஜி. நான் தேடிப்பார்க்கின்றேன்பா. நன்றிப்பா

      நீக்கு
  10. வணக்கம்

    தேடிய பாடல்களின் தொகுப்பு எனக்கு கிடைத்தது மிக்கமகிழ்வு... சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் பல த.ம8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. ஜெய்சங்கர் பாடல்களில் இணைக்க மறந்து விட்ட மிக முக்கியமான பாடல் ஒன்றை இப்போது இணைத்துள்ளேன். உயிரா மானமா படத்தில் வரும் "கொடியில் இரண்டு மலர் உண்டு.." என்னும் பாடல். பதிவை எழுதிக்கொண்டே வரும்போது நினைவில் இருந்தது. ஒரு கொடியில் இருமலர்கள் பாடலை இணைத்தவுடன் இதை இணைக்க மறந்து விட்டேன் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இணைத்திருந்தேன்.13 ஆவது பாடலாக ஒரு கொடியில் இருமலர்கள் எனும் பாடல் அது தானே?

      மீள் வருகைக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி

      நீக்கு
    2. காஞ்சித்தலைவன் படத்தில் வரும் 'ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா...' பாடல் வேறு..

      உயிரா மானமா படத்தில் வரும் 'கொடியில் இரண்டு மலர் உண்டு..' பாடல் வேறு.

      அப்புறம் கௌதமன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் குமாஸ்தாவின் மகள் படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓதிவரும் பாடல். அதை நான் பதிவில் சேர்த்திருக்கவில்லை.

      நீக்கு
    3. அட! அப்படியா. அப்படின்னால் பாடல்களின் முதல் வரியுடன் படங்கள் பெயரையும் இணைக்க வேண்டும் அல்லவா?

      இந்த மனறத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேனையும் இணைத்து விட்டேன். உண்மையில் பாச மலர்களின் பாசம் கூற இத்தனை பாடல் உண்டா என்பதே எனக்கும் ஆச்சரியம் தான்.

      நீக்கு
  12. நல்ல பாடல்களின் தொகுப்பு/வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  14. சில பாடல்கள் கேட்டது போல் டக்கென்று நினைவுக்கு வரவில்லை. ஒரு வேளை கேட்டால் நினைவுக்கு வருமாக இருக்கும். கேட்க வேண்டும்.....நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!