25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4

நம் விடுதலை போரில் ஆரம்பம் மகத்துவமானது!.
அது மட்டும் தான் இன்றைய வரலாறாய் இருக்க வேண்டும், சுதந்திரம் கிடைத்து ஆங்கில அரசு இலங்கையை திருப்பி கையளிக்கும் போது நம் இன தலைவர்கள் விட்ட தவறுகள்?

அதனூடான போராட்ட விதைகள், மட்டும் பேசப்பட வேண்டும், இடையில் சில பல கசப்புக்கள் மறைக்கப்பட அல்லது மறக்கப்பட வேண்டும், இதிலும் இந்திய அரசின் பகடைக்காய்களாய் நம் கை கொண்டு நம் கண் குத்தி குருடாக்கப்ப்ட்ட அரசியல் கோமாளித்தனம் குறித்து பேசி.. இனியும் ஆவதென்ன? இலங்கை அரசுடன் முட்டி போதி பெறப்போதும் என்ன?

ஐ, நா முன் நின்று நம் நேரத்தினை வீணாய் செலவிடுவதை விட ஆக்கபூர்வமாய்   உறங்கிக்கொண்டிருக்கும்  உள்ளங்களை தட்டி எழுப்ப... சிந்திக்க வைக்க எது அவசியமோ அதை மட்டும் நாம் இலக்காக்குவோம்.அறிவால் ஈழத்தை கட்டி எழுப்ப வேண்டிய எம் சமுதாயம் அறிவை மழுங்கடித்து வரலாற்றினை அறியாது உணர்வுகளால் மட்டும் உயிர்த்தெழுவதனால் ஆகப்போவது என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணர்வுகளை தூண்டி கல்லூரி பாடங்களை பகிஷ்கரித்து தெருவில் நிறுத்தி படிக்கும் காலங்களை அதிகமாக்கி பொருட்செலவும், உடல், உளரிதியான உளைச்சல்களையும் உருவாக்கி ஈற்றில் போராளியாக்கி, முழுக்குடும்பத்துக்கும் பாதிப்பை உருவாக்கி, படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கும் சொத்து, நகை நட்டை வித்து வட்டிக்கு கடன் வாங்கி... நாட்டை விட்டு நாடோடியாய் துரத்தப்பட்டு, பட்ட கடன் அடைக்க நாற்பது வயது வரை நாயாய் உழைத்து.... மாரடைப்பிலும் விபத்திலும் மாண்டு சாவில் கூட உண்மையாய் கண்ணீர் விட எவரும் இல்லா அனாதை கள் ஆவதற்கா அனைத்தையும் இழந்தோம்?

எங்கே அடித்தால் எங்கு வலிக்கும் என அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது. அதற்கு நாமும் பலியாகிக்கொண்டிருக்கின்றோம்.
இன்றைய சூழலில் இலங்கையில் கத்தி இன்றி இரத்தமின்றி ஒரு மாபெரும் யுத்தம் நடக்கின்றதென்பதை எப்போது புரிந்து கொள்ள போகின்றீர்கள்?
ஒரு இனத்தை வெற்றி பெற அவன் அறிவை மழுங்கடிக்க வேண்டும் என சரியாக புரிந்தவர்களாய் அரசியல் வாதிகள் இருக்க... அதற்கு நாம் இடம்கொடுக்கலாமா?
இஸ்ரேல்...? 
நமக்கு கற்றுத்தரும் பெரிய பாடம் ஒன்றுண்டு!

2 கருத்துகள்:

  1. இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே எம் தமிழினம் தமிழகத்தில் இதை வைத்து அரசியல் நடத்துக்கிறது... எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் இது,

    பதிலளிநீக்கு
  2. http://pudhumaipadaippugal.blogspot.in/2016/11/blog-post.html?m=1

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!